திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முன்னுரிமை தரிசனத்தை தேவஸ்தானம் வழங்க உள்ளது.
திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள் மற்றும் 0}5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மாதத்திற்கு இருமுறை தேவஸ்தானம் முதன்மை தரிசனங்களை வழங்கி வருகிறது. அதன்படி இம்மாதம் நவம்பர் 21ம் தேதி மூத்த குடிமக்கள்(65 வயதை கடந்தவர்கள்) 4000 பேருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் டோக்கன், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் டோக்கன், மாலை 3 மணிக்கு ஆயிரம் டோக்கன் என ஒரே நாளில் 4 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
அதேபோன்று 0}5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கும் புதன்கிழமை (நவம்பர் 22) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை சுபதம் வழியாக ஏழுமலையானின் தரிசனம் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.