ஏப்ரல் 30-ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
மதுரை அழகர்கோயிலில் ஏப்ரல் 30-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
மதுரை: மதுரை அழகர்கோயிலில் ஏப்ரல் 30-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
ஆண்டுதோறும் அழகர்கோயிலில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கம் வைபவம் விமரிசையாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இந்தாண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 3-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்தாண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது.