திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
காளசமுத்திரம் ஊராட்சியில் மிகவும் பழைமையான திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பல்வேறு தலைப்பில் மகாபாரதச் சொற்பொழிவு நடைபெற்று வந்தது. பின்னர், தினமும் இரவும் மகாபாரதம் தொடர்புடைய கட்டைக் கூத்து நடைபெற்று வந்தது.
இதையடுத்து, துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.
விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.