செய்திகள்

தன்வந்திரி பீடத்தில் அமாவாசை யாகம்

தினமணி

வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில், அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் புதன்கிழமை அமாவாசை யாகம் நடைபெற்றது.
இதில், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் செஞ்சி தாலுக்கா நல்லான்பெற்றபிள்ளை கிராமத்தில் உள்ள தவத்திரு சிவஜோதி மோன சித்தர் மற்றும் சென்னை மகா கால பைரவர் ஞானபீடம் சுவாமிகள் பங்கேற்றனர்.
இந்த யாகத்தில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், கடுகு, வெண் கடுகு, சிகப்பு அரளி, 108 மூலிகைகள், மஞ்சள், வெள்ளை பூசணிக்காய் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டன. 
தொடர்ந்து மகா பூர்ணாஹுதியுடன் மகிஷாசுரமர்த்தினிக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT