செய்திகள்

மார்ச் 21 வரை கவனமாக இருக்க வேண்டிய 4 நட்சத்திரங்கள்!

தினமணி

மூலம், பூரட்டாதி, மிருகசீரிஷம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரக்காரர்களாக இருந்தால், கட்டாயம் இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்வது அவசியமாகும். 

நட்சத்திரங்கள் 27-க்கும் ஒவ்வொரு அதிபதி உண்டு. அந்தவகையில் 27 நட்சத்திரங்களின் வரிசையில் 19-வது இடத்தை பெறுவது மூலம் நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவான் ஆவார். 25-வது இடத்தை பெறுவது பூரட்டாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி குருபகவானாவார். 5-வது இடத்தைப் பெறுவது மிருகசீரிஷ நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். 7-வது இடத்தைப் பெறுவது புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குருபகவானாவார். 

மூலம் - பூரட்டாதி - மிருகசீரிஷம் - புனர்பூசம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் கிரகநிலை சஞ்சாரம் மார்ச் 21 (Till march end) வரை சரியில்லாத காரணத்தால் இந்த நட்சத்திரக்காரர்கள் மிக மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். 

மேலும், இந்த ராசிக்காரர்கள் முக்கியமாக எண்ணம் - புத்தி - செயல் - பேச்சு - முடிவெடுக்கும் தருணம் - ஆகியவற்றில் அவசரமும், குழப்பமும்  ஏற்படலாம். கோபம் அதிகரிக்கும். 

வாகனங்களில் செல்லும் போது மிகக் கவனம் அவசியம். தினமும் வீட்டை விட்டுக் கிளம்பும் முன் குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்கி விட்டுச் செல்வது நன்மையளிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT