செய்திகள்

சீனிவாச மங்காபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரருக்கு புஷ்ப யாகம்

தினமணி

திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு புதன்கிழமை வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது.

திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில், கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 

அப்போது அர்ச்சகர்களாலோ, கோயில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளாலோ அறிந்தோ, அறியாமலோ ஏதேனும் குறை அல்லது தவறு உள்ளிட்டவை நடந்திருந்தால், அவற்றைக் களைய உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. 

அதன்படி, புதன்கிழமை கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது. 

இதற்காக தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ரோஜா, சாமந்தி, மல்லிகை, கனகாம்பரம், அரளி, சம்பங்கி, தாழம்பூ, தாமரை, அல்லி உள்ளிட்ட 3 டன் மலர்களும், மரிக்கொழுந்து, தவனம், மருவம், துளசி, வில்வம், கதிர்பச்சை உள்ளிட்ட இலைகளும் தருவிக்கப்பட்டன. புஷ்ப யாகத்துக்கு முன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பிறகு அவர்களை கல்யாண மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்தனர். 

இதில், ரூ. 516 செலுத்தி பங்கு கொண்ட தம்பதியருக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை உற்சவமூர்த்திகள் தங்க பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனர். இதில் கோயில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT