செய்திகள்

பழனியில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 

தினமணி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 

பழனி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா முக்கியமான திருவிழாவாகும். நிகழாண்டில் இவ்விழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒருவாரம் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. உச்சிக்காலத்தின்போது மூலவர் சன்னதியில் விநாயகர், தண்டாயுதபாணி சுவாமிக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து துவாரபாலகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்புக்கட்டப்பட்டது. 

அதையடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தைத் தொடங்கினர். வரும் 13-ம் தேதி சூரசம்ஹாரமும், மறுநாள் நவ.14 அன்று காலை 10.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும். 

விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT