செய்திகள்

மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 

DIN

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. மண்டல மகரவிளக்கு விழாவின்போது ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவது வழக்கம். இந்தாண்டு மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் நாளை மறுநாள் 17-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. நடை திறந்ததும் ஐயப்பனுக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. 

நவம்பர் 17-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை முடிந்த பின்பு கோயில் நடை அடைக்கப்படும். 3 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 30-ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை மீண்டும் திறக்கப்படும். 

ஐனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதுவரை கோயில் நடை திறந்திருக்கும். சபரிமலை தொடர்ச்சியாக 62 நாட்கள் நடை திறந்திருக்கும் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

SCROLL FOR NEXT