செய்திகள்

ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.80 கோடி

DIN


ஏழுமலையான் உண்டியல் வருமானம் திங்கள்கிழமை ரூ.2.80 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி திங்கள்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.2.80 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.16 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், கல்விதானம் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் மொத்தம் ரூ.16 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.


71,179 பேர் தரிசனம்
 ஏழுமலையானை திங்கட்கிழமை முழுவதும் 71,179 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,156 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 
செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி 29 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்திற்கு 10 மணிநேரம் தேவைப்பட்டது. நடைபாதை, நேர ஒதுக்கீடு மற்றும் விரைவு தரிசனத்திற்கு 3 மணிநேரம் தேவைப்பட்டது. 
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ ஸ்வாமி கோயிலில் 12,813 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் 4,956 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 18,170 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் 2,102 பக்தர்களும் திங்கள்கிழமை தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் குறைகள் தொடர்பாக தேவஸ்தானத்திடம் புகார் அளிக்க தொடர்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்கள் - 18004254141, 93993 99399. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT