செய்திகள்

தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நீராட சுற்றுலாப் பயணிகளுக்கு தடை 

தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாணத்தில் நீராட சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

DIN

தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாணத்தில் நீராட சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம், தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்குப் பரிகார பூஜை செய்வதற்காக ஏராளமானோர் வருவார்கள். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாலும், புதிய புயல் சின்னம் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாலும் கடலில் புனித நீராட சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடல் நீர் மட்டம் நேற்று திடீரென அதிகமாக உயர்ந்ததால், நவக்கிரக சிலைகள் முற்றிலும் மூழ்கியது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி புனித நீராடத் தடை விதித்துள்ளது. இதனால், நவக்கிரகங்களைத் தரிசிப்பதற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாதன் லயனுக்கு எதிராக ஆஸி. கிரிக்கெட் வாரியம் செயல்படுகிறதா? ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்!

சென்னை திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள 12 தமிழ்ப் படங்கள்!

கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்களுக்கு வந்தே மாதரத்தின் முக்கியத்துவம் எப்படி புரியும்? அகிலேஷ்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு! 4 பேருக்கு என்ஐஏ காவல் நீட்டிப்பு!!

SCROLL FOR NEXT