செய்திகள்

பம்மல் ஸ்ரீ ஐயப்பனுக்கு கோடி அர்ச்சனை விழா

DIN

உலக நன்மையை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பம்மல் ஸ்ரீ தர்மசாஸ்தா குருவாயூரப்பன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பனுக்கு கோடி அர்ச்சனை விழா நவம்பர் 24 தொடங்கி டிசம்பர் 9 வரை நடைபெறுகின்றது. 

மேற்படி தினங்களில் அதிகாலை மகா கணபதி ஹோமத்துடன் கோடி அர்ச்சனை ஆரம்பமாகின்றது. ஏழுநாட்களுக்கு சப்த மிருத்யுஞ்சஜய ஹோமமும், கோடி அர்ச்சனை முடிவில் தன்வந்திரி ஹோமமும், மகாலட்சுமி ஹோமமும், பகவதி சேவை, சுதர்ஸன ஹோமம், 108 சுமங்கலி பூஜையும், குருசாமிகளுக்குக் குருபூஜையும் நடைபெற உள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவிக்கின்றது. 

ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் தாந்த்ரீக முறையில் ஷடாதார பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ ஐயப்பனை தரிசிப்பதோடு சிறப்பு ஹோமங்கள், கோடி அர்ச்சனையில் பங்கேற்குமாறு ஸ்ரீ தர்மசாஸ்தா சேவா சங்கம் டிரஸ்ட் நிறுவனர் ப,கிருஷ்ணன் கேட்டுக்கொள்கின்றோம். 

ஹோமகட்டணம் மற்றும் இதர தகவல்களுக்கு - 6444444238/ 9444486217    

- தகவல் எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஜெர்மன் வெளியுறவு அமைச்சர்!

’எனக்குப் பின் யார்..?’ -பிரதமர் மோடி யாரைச் சுட்டிக்காட்டுகிறார்?

அன்பே, நீ கலைகளின் தொகுப்பு... சாக்க்ஷி மாலிக்!

‘கீழ்த்தரமான பேச்சு’: பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை!

கடலோரக் கவிதை!

SCROLL FOR NEXT