செய்திகள்

திருப்புறம்பயம் சாட்சிநாதஸ்வாமி தலத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோமம்

தினமணி


திருப்புறம்பயம், ஸ்ரீசாட்சிநாத ஸ்வாமி தலத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. 

கும்பகோணம் அடுத்துள்ள திருப்புறம்பயம் திருத்தலத்திலுள்ள, அருள்மிகு கரும்பாடு சொல்லியம்மை சமேத - ஸ்ரீசாட்சிநாத சுவாமி திருக்கோயில் வாயிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் அருள்மிகு தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு இன்று நடைபெற உள்ள 4-10-2018 குருப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு 03-10-2018 மாலை சிவாச்சாரியார்கள், சபாபதி, பாபு, ஐயப்பன், சுந்தர் அகியோர் தலைமையில் சிறப்பு ஹோமமும், அருள்மிகு தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு திருக்கோயில் சிவாச்சாரியார் ராஜேஷ் அபிஷேகங்கள் செய்தார்.

அதனைத்தொடர்ந்து அலங்காரமும், தூப, தீபாரதனைகளும் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தகள் பெரும் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். நிறைவில் வந்திருந்த அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

- குடந்தை ப.சரவணன் 9443171383

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT