முகப்பு
செய்திகள்

நேபாளத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட கிருஷ்ணர் கோயில்!

நேபாளத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

லலித்பூர்: நேபாளத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. 

நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான லலித்பூர் கிருஷ்ணர் கோயில் பெரிய அளவில் சேதமடைந்தது. 

17-ம் நூற்றாண்டில் சித்தி நரசிங் மல்லால் என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்த கலைக் கோயில் நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் அடைந்தது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி புராதன கோயில் தாற்காலிகமாக மூடப்பட்டது.

இதன்பின், கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், கிருஷ்ண பகவான் அவதரித்த ஜென்மாஷ்டமி தினமான நேற்று திறக்கப்பட்டது.

புத்தம் புது பொலிவுடன் காட்சியளிக்கும் லலித்பூர் கிருஷ்ணர் கோயிலைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். இந்திய சீக்கியர் பாணியில் கட்டப்பட்டது இந்தப் புராதன கோயில்.

முழு கட்டுரையைப் படிக்க →