செய்திகள்

திருவலஞ்சுழி சுவேதவிநாயகர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற தீர்த்தவாரி

தினமணி

கும்பகோணம் அடுத்துள்ள, திருவலஞ்சுழி அருள்மிகு கபர்தீஸ்வரர் திருக்கோயிலில், தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கும், அருள்மிகு வாணி கமலாம்பிக சமேத சுவேதவிநாயகர் ஆலயத்தில்,  விநாயகர் சதுர்த்தி உற்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் ஒன்பதாம் திருநாளான விநாயக சதுர்த்தி தினத்தினையொட்டி விநாயகர் சதுர்த்தியன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு திருத்தேர் வடம் பிடித்து, திருவீதி வலம் வந்தார்கள்.

இவ்விழாவின் தொடர்ச்சியாக இன்று(14-9-2018) காலை அரசலாற்றில் தீர்த்தவாரியும், மாலை துவஜா அவரோகணம், திக்விஸர்ஜனமும் நடைபெற்றது. 

- குடந்தை ப.சரவணன் - 9443171383

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT