ஏழுமலையானுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் லாரி ஒன்றை நன்கொடையாக வழங்கி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் புதிதாகத் தயாரித்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள காமெட்-1214 லாரியை நன்கொடையாக வழங்கியது. இதை அந்த நிறுவனத்தின் குளோபல் டிரக் பிரிவின் தலைவர் அனுஜ் கதூரியா செவ்வாய்க்கிழமை காலை தேவஸ்தான கோயில் இணை அதிகாரி ஹரேந்திரநாத்திடம் நன்கொடையாக வழங்கினார். லாரிக்கு பூஜைகள் செய்து தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.