செய்திகள்

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணெய்த் தாழி உற்சவம்

தினமணி

ராமநவமி பிரமோத்ஸவத்தையொட்டி, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணெய்த் தாழி உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ராமநவமி பிரமோத்ஸவம் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டு சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை வெண்ணெய்த் தாழி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, நவநீத சேவையில் ராமர் வெண்ணெய்த் தாழி பல்லக்கில் எழுந்தருளினார்.
இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ராமபிரானை வழிபட்டனர். மாலையில் குதிரை வாகனத்தில் சந்தானராமர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். கோயில் அர்ச்சகர் நாராயணன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT