செய்திகள்

திருமலை: பவித்ரோற்சவம் நிறைவு

தினமணி


திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர பவித்ரோற்வசம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. 
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. கோயிலில் ஏற்பட்ட தோஷங்களை களைய இந்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை அர்ச்சகர்கள் சம்பங்கி பிரகாரத்தில் எழுந்தருளச் செய்தனர். அவர்களுக்கு பால், தயிர், தேன், பழரசம், இளநீர், மஞ்சள், சந்தனம் செஞ்சந்தனம் உள்ளிட்ட திருமஞ்சனப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. 
அதன்பின், அவர்கள் முன் ஹோமம் வளர்த்தி அர்ச்சகர்கள் மகா பூர்ணாஹுதியுடன் வருடாந்திர பவித்ரோற்சவத்தை நிறைவு செய்தனர். அதன்பின், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் வலம் வந்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு, சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT