செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் ஆகஸ்ட் 29-ல் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் 

DIN


நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

அதன்படி இந்தாண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா வருகிற 29-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது. 

முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 8-ம் தேதி கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாரதனையும் நடைபெறும். 

இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல் ஆலுவர் உள்ளிட்டோர் செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT