செய்திகள்

திருப்பதி பக்தி சேனல் தலைவராக பிருத்வி பாலிரெட்டி நியமனம்

DIN


திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (எஸ்விபிசி) தொலைக்காட்சியின் தலைவராக பிருத்வி பாலிரெட்டியை ஆந்திர அரசு நியமித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவராக ஜெகனின் உறவினரான சுப்பா ரெட்டியும், தேவஸ்தான சிறப்பு அதிகாரியாக தர்மா ரெட்டியும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டனர். தேவஸ்தானத்தின் பக்தி சேனல் தலைவராக தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிருத்வி பாலிரெட்டியை ஆந்திர அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவு வெள்ளிக்கிழமை தேவஸ்தானத்திற்கு அனுப்பப்பட்டது. 
இதற்கு முன் தேவஸ்தானத்தில் இந்த பதவி இருந்ததில்லை. கடந்த ஆட்சியின்போது அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதிதாக இந்தப் பதவியை ஏற்படுத்தினார். அப்போது இப்பதவிக்கு பிரபல தெலுங்குப் பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.ராகவேந்திர ராவ் நியமிக்கப்பட்டார். அவர் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT