செய்திகள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

DIN


ஆனி மாத பூஜைகளுக்கான சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜைகள் மற்றும் தமிழ் மாதாந்திர பூஜைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி, ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை 5.00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றவுள்ளார். இரவு 10.00 மணிக்கு நடை  அடைக்கப்பட்டு, மீண்டும் நாளை அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம், நெய் அபிஷேகம் நடைபெறும். 

தொடர்ந்து சகஸ்ர கலச பூஜையும் நடைபெறும். இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அன்றிரவு 10.00 மணிக்கு கோயில் நடை  அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT