செய்திகள்

மதுரை கள்ளழகர் கோயிலில் மார்ச் 18-ல் திருக்கல்யாண வைபவம் 

தினமணி

மதுரை கள்ளழகர் கோயிலில் வரும் 18-ம் தேதி பங்குனி மாத திருக்கல்யாணம் தொடங்குகிறது. 

108 வைணவ தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

இந்த விழாவானது வருகிற 18-ம் தேதி காலை 9.45 மணி அளவில் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகத் திருக்கல்யாண வைபவம் வருகிற 21-ம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் விழா நடைபெறுகிறது. 

22-ம் தேதி மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் இந்த திருவிழா நிறைவுபெறுகிறது. திருக்கல்யாண திருவிழாவைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT