முகப்பு
செய்திகள்

திருவள்ளூர் சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் மார்ச் 21-ல் திருக்கல்யாண மகோற்சவம்

திருவள்ளூர் சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் மார்ச் 21-ம் தேதியன்று திருக்கல்யாண மகோற்சவம் நடைபெறுகிறது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:24 AM
பகிர்:

திருவள்ளூர் சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் மார்ச் 21-ம் தேதியன்று திருக்கல்யாண மகோற்சவம் நடைபெறுகிறது. 

திருத்தொட்டிக்கலையில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், பங்குனி மாதம் 07-ம் நாள் (21.03.19) பங்குனி உத்திர நன்னாளன்று திருக்கல்யாண மஹோற்சவம் சிறப்பாக நிகழ இருக்கிறது. 

காலை - 8.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பம்

காலை - 10.15 திருக்கல்யாண வைபவம் ஆரம்பம்

பகல் - 12.30 தீபாராதனை

பகல் - 1.00 திருக்கல்யாண திருஅமுது

இரவு - 6.00 அம்மையப்பர் (பஞ்சமூர்த்திகள்) பட்டினப் பிரவேச வீதிஉலா

பொதுமக்கள் அனைவரும் தாங்கள் குடும்ப சகிதம் தந்து திருக்கல்யாண அருட்காட்சியைக் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.