செய்திகள்

வால்மீகீஸ்வரர் கோயிலில்  திருக்கல்யாண உற்சவம்

DIN


ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரத்தில் வடிவுடை அம்பாள் சமேத வால்மீகீஸ்வரர் கோயில்  பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு திருவலம் சர்வ மங்களா பீடத்தின் சாந்த சுவாமிகள் முன்னிலையில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட  உற்சவர் வால்மீகீஸ்வரருக்கும் வடிவுடை அம்மைக்கும்  உத்திர நட்சத்திரம் கன்னியா லக்கினத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் உபயதாரர்கள் சார்பில்  வேட்டி, சேலை, இனிப்பு வகைகள், பழங்கள்,தேங்காய் உள்ளிட்ட பொருள்களை சீர்வரிசை வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT