செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் புஷ்ப யாகம்

தினமணி


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை இரவு புஷ்ப யாகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கடந்த 13 - ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கி நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் கடந்த 21-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை புஷ்ப யாகம் நடைபெற்றது.

இதையொட்டி ஆண்டாள் ரங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வெள்ளிக்கிழமை  இரவு ஆண்டாள் ரங்கமன்னார் சுவாமிகளுக்கு மல்லிகைப் பூ, ரோஜாப்பூ,  சம்பங்கி, விரிச்சிப் பூ, பலவித வண்ண ரோஜாக்கள் மரிக்கொழுந்து மற்றும் துளசி போன்ற மலர்களால் மந்திரங்களை சொல்லி பட்டர்கள் புஷ்ப யாகம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள்- ரெங்கமன்னாரை வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT