செய்திகள்

பிரம்மோற்சவம்: கல்பவிருட்ச வாகனத்தில் கோவிந்தராஜர் பவனி

DIN


திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை கல்பவிருட்ச வாகனத்தில் கோவிந்தராஜர் மாடவீதியில் வலம் வந்தார். 
இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 8.30 மணி வரை கல்பவிருட்ச வாகன சேவை நடைபெற்றது. கல்பவிருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கோவிந்தராஜர் மாடவீதியில் வலம் வந்தார். நினைத்ததை அருளும் கல்பவிருட்ச வாகனத்தில் வரும் பெருமாளை அங்கு கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். அதன் பின், மதியம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜருக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெற்றன.  
பின் இரவு 8 மணிக்கு தேசத்தைக் காக்கும் மாமன்னர்கள் வலம் வரக் கூடிய சர்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் கோவிந்தராஜர் மாடவீதியில் வலம் வந்தார். இதைக் காண மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இந்த நிகழ்வில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  வாகன சேவையின் போது கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 
கோயில் எதிரில் உள்ள திருக்குளக்கரையில் மாலை வேளையில் கதாகாலட்சேபம், பக்திப் பாடல் கச்சேரி, ஹரிகதை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. வாகன சேவைக்கு முன் ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT