வடசேரி சென்னகேசவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
DIN
ஆம்பூர் அருகே வடசேரி சென்னகேசவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.