செய்திகள்

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் அக்.5-ல் மூல நட்சத்திர திருமஞ்சனம்

DIN

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் அக்டோபர் 5-ம் தேதி மூல நட்சத்திர திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் மூல நட்சத்திரத்தன்றும், ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று பால் அபிஷேக திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. அந்தவகையில், இந்த மாதம் அக்டோபர் 5-ம் தேதி சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரமும், புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமையும் சேர்ந்து வருகின்றது.

கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின் புரட்டாசி சனிக்கிழமையும், ஜென்ம நட்சத்திரமும் ஒன்றாக இணைகிறது என்பதால் இது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இந்த விசேஷ நன்னாளில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 1,500 லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

இந்த விசேஷ திருமஞ்சனத்தில் பங்குபெற விரும்புபவர்கள் கோயில் டிரஸ்டில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT