செய்திகள்

சங்கிலி பூதத்தார் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

தினமணி

திருநெல்வேலி நகரம் ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று(செப். 4) நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, பிம்பசுத்தி, மூர்த்திகளுக்கு ரக்ஷா பந்தனம், வேதிகார்ச்சனை மூல மந்திர ஜபம், ஹோமம், த்ரவ்யாஹுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம் உள்ளிட்டவை நடைபெற்றது. 

காலை 6.30 மணிக்கு கடம் புறப்பாடு, விமான அபிஷேகம், மூலாலய மூர்த்திக்கு புதன் ஹோரையுடன் கூடிய சிம்ம லக்கனத்தில் ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீபாராதனை, மகேஸ்வர பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு விசேஷ அலங்காரத்துடன் லலிதா ஸகஸ்ர நாம அர்ச்சனை, சோடஷ உபசார தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT