செய்திகள்

காளஹஸ்தி கோயில் புதிய செயல் அதிகாரி பொறுப்பேற்பு

தினமணி


காளஹஸ்தி கோயிலின் புதிய செயல் அதிகாரியாக, சந்திரசேகர ரெட்டியை அறநிலையத் துறை நியமித்துள்ளது.
ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில், ஆந்திர மாநில அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து ராகு-கேது பரிகார பூஜை செய்துவிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த கோயில் செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ராமசாமியை, கடந்த வாரம் அறநிலையத் துறை பணிமாற்றம் செய்தது. 
அப்பதவிக்கு புதிதாக, சந்திரசேகர ரெட்டியை அறநிலையத் துறை அதிகாரிகள் நியமித்துள்ளனர். இவர், வியாழக்கிழமை காலை காளஹஸ்தி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, பதவியேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன், ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT