FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இன்று சட்டத்தேரில் திருவீதியுலா

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இன்று சட்டத்தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருகிறார். 

Updated On : 12 செப்டம்பர் 2019, 11:38 am IST
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இன்று சட்டத்தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருகிறார். 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல்கள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. 

இதில் 7-ம் திருநாளில் சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிஷேகமும், 9-ம் திருநாளில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

Advertisement

Advertisement

11-ம் திருநாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வர் சட்டத்தேரில் எழுந்தருளி ஆவணி மூல வீதி, கீழ் பட்டமார் தெரு வழியாக கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தை வந்தடைந்தனர். 

நாளை முக்கிய நிகழ்வாக பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments