செய்திகள்

திருவாரூர் வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

DIN

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்காவில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் மகாகும்பாபிஷேக பெருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 

மன்னார்குடி தாலுக்கா, நெ. 43 பள்ளிவர்த்தி கிராமத்தில் அருள்மிகு கல்யாண விநாயகர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள், பூரண புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில்களின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் செப்டம்பர் 11-ம் தேதி(நேற்று), காலை நடைபெற்றது.

இவ்வாலயங்கள் ஹரிச்சந்திரா நதிக்கரையில் திருக்கொள்ளிக்காடு அருகில் உள்ளது. கல்யாணமாகாத ஆண் / பெண்கள் இங்குள்ள கல்யாண விநாயகரை தரிசித்து அருகிலுள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் வழிபட்டால் உடனடியாக திருமணம் கை கூடும் என்பது ஐதீகம்.

தகவல், பட உதவி - பி. சாம்பசிவம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT