செய்திகள்

திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்

DIN

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 

திருப்பதி திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் 9 நாட்கள் நடைபெறும். இவ்விழாவானது அக்டோபர் 8-ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. 

நவராத்திரி பிரம்மோற்சவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என்பதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தேவஸ்தானம் செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நவரத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள்

செப்.30 - மாலை கொடியேற்றம்

அக்.1 - காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ச வாகனத்திலும் உலா

அக்.2 - காலை சிம்ம வாகனம், இரவு முத்துபல்லக்கு வாகனம்

அக்.3 - காலை கற்பகவிருட்ச வாகனம், இரவு சர்வபூபாள வாகனம்

அக்.4 - காலை மோகினி அவதாரம், இரவு கருட வாகனம்

அக்.5 - காலை அனுமன் வாகனம், மாலை தங்கரதம், இரவு யானை வாகனம்

அக்.6 - காலை சூரியபிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம்

அக்.7 - காலை தேரோட்டம், இரவு குதிரை வாகனம்

அக்.8 - காலை சக்ரஸ்நானம், மாலை கொடியிறக்கம் நிகழ்ச்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT