செய்திகள்

சிதம்பர ரகசியம் என்றால் என்ன? வியப்பூட்டும் தகவல்கள்..!!

சிதம்பர நடராஜர் கோயிலும், அதன் புவியியல், கட்டிட அமைப்பு அதனால் புதையுண்டு இருக்கும் அதிசயங்கள் போன்றவற்றை தான் சிதம்பர ரகசியம்..

சி.பி.சரவணன்

சிதம்பர நடராஜர் கோயிலும், அதன் புவியியல், கட்டிட அமைப்பு அதனால் புதையுண்டு இருக்கும் அதிசயங்கள் போன்றவற்றை தான் சிதம்பர ரகசியம் என்று கூறிவருகின்றனர். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி அக்கோயிலில் ஏதோ சிறப்பு வாய்ந்த சக்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்..!!
மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்..!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பெயரில் பலரும் பலவிதமான செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்கள் தான் அந்த ரகசியங்கள் என்றும் சிலர் அறிவியல் பூர்வமாக கூறுகின்றனர்.

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள். நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயல்களும் ஏதோ ஒன்றை நமக்கு தெளிவாக கூறுவதாய் தான் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள அந்த வியப்பூட்டும் சில அற்புதமான ரகசியங்கள் பற்றி இனிக் காணலாம்..!!

பூமத்திய ரேகையின் மையம்

இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Centre Point of World's Magnetic Equator).

ஒரே நேர் கோடு

பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE) அமைந்துள்ளது. இன்று கூகுள் மேப் (Google Map) உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும். இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

மனித உடலின் அடிப்படை

மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. 

சுவாசம்

விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

நாடிகள்

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

திருமூலர் மந்திரம்

திருமூலரின் திருமந்திரத்தில் இதைப் பற்றிய தகவல்கள். மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது "மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம் சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

ஆச்சரியங்கள்:

"பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்து. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது 4 வேதங்களை குறிக்கின்றது,

28 தூண்கள்:

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (Beam), இது 64 ஆயக்கலைகளைக் குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (Cross Beams), மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களைக் குறிக்கின்றது.

பொற் கூரை

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

ஆனந்த தாண்டவம்

சிதம்பர நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவ நிலையினை, வெளிநாட்டு அறிஞர்கள் "Cosmic Dance" என்று அழைக்கின்றனர்.

தீர்த்தங்கள்

கோயிலில் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

கோபுரங்கள்

இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும். இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT