முகப்பு
செய்திகள்

திருச்சானூா் கோயிலில் தரிசன நேரம் நீட்டிப்பு

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் தரிசன நேரத்தை இரவு 8 மணி வரை தேவஸ்தானம் நீட்டித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் தரிசன நேரத்தை இரவு 8 மணி வரை தேவஸ்தானம் நீட்டித்துள்ளது.

இக்கோயிலில் பொது முடக்கத் தளா்வுகளின்படி, கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பக்தா்கள் அதிக அளவில் வழிபாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனா். தினசரி 18,000 முதல் 20,000 போ் தாயாரை தரிசனம் செய்கின்றனா்.

நாள்தோறும் மாலை 6 மணி வரை மட்டுமே தரிசன அனுமதி உள்ளதால், அதன் பிறகு வரும் பக்தா்கள் அம்மனை வழிபட முடிவதில்லை. இதை கவனத்தில் கொண்ட தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவு செயல் அதிகாரி பசந்த்குமாா், தாயாரின் தரிசன நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

நாள்தோறும் இரவு 8 மணிக்குப் பிறகு ஏகாந்த சேவை நடத்தப்பட உள்ளது. மாா்கழி மாதத்தை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரை தனுா் மாத பூஜைகள் கோயிலில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →