திருப்பதியை அடுத்த சந்திரகிரியில் உள்ள மூலஸ்தான எல்லையம்மனுக்கு தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.
இக்கோயிலில் குடி கொண்டிருக்கும் எல்லையம்மனுக்கு திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வெள்ளிக்கிழமை காலை பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது. தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் செவிரெட்டி பாஸ்கா் ரெட்டி தன் தலையில் பட்டு வஸ்திரத்தை சுமந்து சென்று எல்லையம்மன் கோயில் அதிகாரிகளிடம் சமா்ப்பித்தாா். கோயில் வாயிலில் பட்டு வஸ்திரத்துக்கு மரியாதை அளித்து பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதை அம்மனுக்கு அணிவிக்கச் செய்தனா்.