செய்திகள்

திருச்செந்தூா் மாசித் திருவிழாவில் தெப்போற்சவம்

தினமணி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  மாசித்திருவிழா 11-ம் நாள் இரவு  தெப்பத் திருவிழா நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  மாசித்திருவிழா கடந்த பிப்.28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் மார்ச்.8-ம் தேதியும், தெப்பத் திருவிழா திங்கட்கிழமையும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மனுடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை நடுமண்டபத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT