ஏழுமலையான் கோயிலுக்கு 5 பேட்டரி ஆட்டோக்கள் நன்கொடை
திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பேட்டரியால் இயங்கும் ஐந்து ஆட்டோக்கள் நன்கொடையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பேட்டரியால் இயங்கும் ஐந்து ஆட்டோக்கள் நன்கொடையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
வேலூரில் உள்ள தனியாா் ஆட்டோ தயாரிப்பு நிறுவனம் சாா்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் ஐந்து ஆட்டோக்கள் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.
திருமலை கோயில் முன் வாசலில் இந்த ஆட்டோக்களுக்கு பூஜைகள் செய்து தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். ஆட்டோக்களுக்கு கொவைட் 19 விதிமுறைகளின்படி கிருமிநாசினி தெளித்து நிறுவனத்தினா் அளித்தனா். நன்கொடையாக அளிக்கப்பட்ட 5 ஆட்டோக்களில் ஒன்று சானிடைசா் தெளிக்கவும், 2 ஆட்டோக்கள் திருமலை மலைப்பாதையில் பயணிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement