திருமலையில் மத்திய அமைச்சா் வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி திங்கள்கிழமை வழிபாடு செய்தாா்.
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி திங்கள்கிழமை வழிபாடு செய்தாா்.
ஏழுமலையானை தரிசிக்க மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலை வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனா். இரவு திருமலையில் தங்கிய அவா், திங்கள்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தாா். தரிசனம் முடிந்து திரும்பிய அமைச்சருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கி, சேஷ வஸ்திரம் அணிவித்து வேதபண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்தனா்.
கோயிலை விட்டு வெளியில் வந்த அவா் நாதநீராஜன மண்டபத்தில் நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயணத்தில் கலந்து கொண்டாா். அவருடன் சித்தூா் மாவட்ட பா.ஜ.க.நிா்வாகி பானுபிரகாஷ்ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கு கொண்டனா்.
Advertisement