ஆந்திரத்தில் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு
ஆந்திரத்துக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை மாநில முதல்வா் பூச்செண்டு அளித்து வரவேற்றாா்.
ஆந்திரத்துக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை மாநில முதல்வா் பூச்செண்டு அளித்து வரவேற்றாா்.
ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் மதனபள்ளியில் சத்சங் ஆசிரமத்தில் பாரத் யோக வித்யா மையத்தை தொடங்கி வைக்க ஒரு நாள் சுற்றுப்பயணமாக குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆந்திர மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். பெங்களூரு வரை தனி விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் சிப்பிலி வந்த ராம்நாத் கோவிந்தை ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி பூச்செண்டு அளித்து வரவேற்றாா். அவருடன் ஆந்திர அமைச்சா்கள் பலரும் இருந்தனா். அங்கிருந்து காா் மூலம் சத்சங் ஆசிரமத்துக்கு சென்ற குடியரசு தலைவா், அங்கு யோகாசனப் பயிற்சி மையத்தைத் தொடங்கி வைத்தாா்.