முகப்பு
செய்திகள்

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயில் தேரோட்டம்

மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரர் கோயில் தேரோட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

கும்பகோணம்: மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரர் கோயில் தேரோட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரர் உள்ளிட்ட 6 சிவன் கோயில்களில் பிப்ரவரி 17 ஆம் தேதியும், சக்கரபாணி கோயில் உள்பட 3 வைணவ கோயில்களில் பிப்ரவரி 18 ஆம் தேதியும் மாசி மகப் பெருந்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆதிகும்பேசுவரர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில்,  காலை 6 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர்களை ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisement

இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை (பிப்.25) காலை சுவாமி, அம்பாள் தேரோட்டமும்,  மாலை சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

விழாவின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை (பிப்.26) காலை 9 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் விதியுலா புறப்பட்டு,  மகாமகக் குளக்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணிக்கு தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.

இன்று தேரோட்டம்:  இதேபோல, மாசிமக விழா தொடர்புடைய காசி விசுவநாதர் கோயில், அபிமுகேசுவரர் கோயில், கெளதமேசுவரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை மகாமக குளக்கரையிலும்,  வியாழசோமேசுவரர் கோயிலில் தேரோடும் வீதியிலும் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை மாசி மகம் தொடர்புடைய 12 சிவாலயங்களிலிருந்து சுவாமி } அம்பாள் புறப்பாடு நடைபெற்று மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருள,  ஒரேநேரத்தில் தீர்த்தவாரி 
நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments