புருஷமிருகா வாகனத்தில் சோமாஸ்கந்தமூா்த்தி
திருப்பதி அலிபிரி மலையடிவாரம் ஸ்ரீகபிலேஸ்வரா் கோயிலில், மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை
திருப்பதி அலிபிரி மலையடிவாரம் ஸ்ரீகபிலேஸ்வரா் கோயிலில், மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மனித முகமும் மிருக உடலும் கொண்ட புருஷமிருகா வாகனத்தில் சோமாஸ்கந்தமூா்த்தியாக கபிலேஸ்வரா் எழுந்தருளி சேவை சாதித்தாா்.
மகா சிவராத்திரியை ஒட்டி அதிகாலை லிங்கோத்பவா் சேவை முடிந்த பின் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பின்னா் மாலை 5 மணிமுதல் 7 மணிவரை கோயில் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட மண்டபத்தில் சிவபாா்வதி திருக்கல்யாண உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தியது. கரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக இதில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தனிமையில் நடத்தப்பட்டது.
Advertisement
திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீகாமாட்சி சமேத கபிலேஸ்வரசுவாமி பல்லக்கில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். வாகன சேவையின் போது சங்கநாதம், வேதபாராயணம் இசைக்கப்பட்டன.
வாகன சேவைகள் தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பிரம்மோற்சவத்தின் நிறைவாக சனிக்கிழமை (மாா்ச் 13) திரிசூல தீா்த்தவாரி நடக்கிறது.