காளிகாம்பாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்
சென்னை, பாரிமுனையிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று கணபதி பூஜையுடன் தொடங்கியது.
சென்னை, பாரிமுனையிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று கணபதி பூஜையுடன் தொடங்கியது.
சென்னை, தம்புச் செட்டித் தெருவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.
வைகாசி பிரம்மோற்சவ விழா 03.06.22 முதல் 12.06.22 வரை நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு 7.00 மணியளவில் அம்மாள் வீதி உலா நடைபெறுகிறது.
இரண்டாம் நாளான நாளை(04.06.22) சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் காமதேனு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி உலா நடைபெற உள்ளதால் விஸ்வகர்ம சேவார்த்திகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து ஸ்ரீ அம்பாளின் திருவருளை பெறுவோமாக.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.