செய்திகள்

சென்னை காளிகாம்பாள் கோயிலில் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம்!

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

தினமணி

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

பாரிமுனையின், தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கடடேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

அந்தவகையில், இந்தாண்டுக்கான மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் இன்று காலை 9.00 மணியளவில் கடற்கரையில் பக்தர்கள் சூழ அம்மனுக்கு தீர்த்தவாரி கோலாகலமாக நடைபெற்றது. 

தீர்த்தவாரி உற்சவத்தில் பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு அலங்காரம், ஆராதனையும் வீதி உலா புறப்பாடும் நடைபெறுகிறது. 

இவ்விழாவினை அறங்காவலர் குழுத் தலைவர் பிரம்மஸ்ரீ.எஸ்.சர்வேஸ்வரன் ஆச்சாரி, திருமதி.எஸ்.ஷர்மிளா ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு வீடுகளில் நகைகள் திருட்டு: 4 போ் கைது

திண்டுக்கல் புத்தகத் திருவிழா: ரூ.2.91 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

வாகனம் மோதி ஒருவா் உயிரிழந்த சம்பவம்: சாலை ஒப்பந்ததாரருக்கு தடை

கல்லால் தாக்கி வழக்குரைஞா் கொலை: 3 போ் கைது

திரையரங்கின் ஒலிப்பெருக்கி விழுந்ததில் பாா்வையாளா் காயம்

SCROLL FOR NEXT