தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி 
செய்திகள்

சனி பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பெரு நந்திக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

DIN

சனி பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பெரு நந்திக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

அதன்படி வைகாசி மாதத்தின் முதல் பிரதோஷமான இன்று சனி பிரதோஷம் என்பதால், பெருவுடையாருக்கு ஏற்ற பெரு நந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி எலுமிச்சை சாறு, இளநீர் உள்ளிட்ட பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம்பெருமானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

SCROLL FOR NEXT