பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை எடுக்கும் முறைகள்!
ரயில் மறியல், பஸ் மறியல், பஸ்ஸை கொழுத்துவது, சேதப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்பது போன்ற அத்துமீறல்கள் நம் அரசியல் பாரம்பரியமாகிப் போனது. அரசின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த பல அரசியல் கட்சிகள் சுய விளம்பரம் மற்றும் சுய லாபத்திற்காக செய்யும் சில ஆபத்தான அபத்த காரியங்களே இவை.
ஒரு மரம் வளர பல ஆண்டுகள் பிடிக்கும். வளர்ந்த பின், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தனது கிளைகளாலும், இலைகளாலும் நிழலைத்தந்து, காய், கனிகளை வழங்கி, மழை தந்து, மனித இனத்திற்கு அளப்பரிய தொண்டாற்றுபவை மரங்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பது மனித இனத்தையே வெட்டிச் சாய்ப்பதற்கு சமமாகும்.
சரி, இவற்றை செய்பவர்களுக்கு தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 சொல்லும் நடவடிக்கைகளைப் பற்றி பார்ப்போம்
தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992
Tamilnadu Property (prevention of Damage &Loss) Act,1992
சட்ட எண்: 59/1992
பொருள் வரையறைகள்- (பிரிவு 2)
“அரசு” என்றால் மாநில அரசு என்று பொருள்படும்.
விளக்கம்: இந்தக் கூற்றின் படி “நிறுவனம்” என்பது ஏதேனும் கூட்டமைப்பு எனப் பொருள்படும் மற்றும் இதில் பொறுப்பாட்சி, நிறுவனம், சங்கம் அல்லது தனி ஆட்களைக் கொண்ட கழகம் உள்ளடங்கும்.
சொத்தைப் பொறுத்த அளவில் கேடு செய்வதற்கான தண்டனை (பிரிவு 3)
Punishment for committing mischief in respect of Property
வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது, போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனும் இருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு ஓராண்டிற்கும் குறைவானதொரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.
தீ அல்லது வெடிபொருள் மூலமாகப் பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவிக்கின்ற கேடு: (பிரிவு 4,)
Mischief causing damage to Property by Fire or Explosive Substance
சொத்து எதற்கேனும் நூறு ரூபாய் அல்லது அதற்கு மேம்பட்ட தொகையின் அளவிற்குச் சேதம் விளைவிக்கும் உட்கருத்துக்கொண்டோ, அல்லது தன்செயலின் மூலம் தான் சேதத்தைப் பெரும்பாலும் அதற்கு விளைவிக்கக்கூடும் என்பதை அறிந்தோ, தீ அல்லது வெடிப்பொருள் எதனின் மூலமாகவேனும் கேடு செய்கின்ற எவரொருவரும் இரண்டாண்டுகளுக்குக் குறைவானதாக இருக்கக்கூடாத, ஆனால் பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு காலளவிற்குக் கடுங்காவல் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனுமிருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு, இரண்டாண்டுக்கும் குறைவானதொரு காலஅளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.
மோட்டர் வாகனங்களில் பயணஞ் செய்கின்றவர்கள் மீது கற்கள், செங்கற்கள் முதலானவற்றை எறிவதற்கான தண்டனை:- (பிரிவு 5)
Punishment for throwing stones, Bricks, etc., upon persons travelling in motor vehicles
மோட்டர் வாகனங்களில் எதிலேனும் பயணஞ்செய்கின்ற நபர்கள் மீது கற்களையோ, செங்கற்களையோ, சோடா பாட்டில்களையோ அல்லது பிற பொருள் எதையேனும் எறிகின்ற செயலைச் செய்கின்ற அல்லது அதைத் தூண்டிவிடுகின்ற அல்லது ஏவிவிடுகின்ற அல்லது அதற்கு மற்றபடி உடைந்தையாயிருக்கின்ற எவரொருவரும், ஆறு திங்களுக்குக் குறையானதாக இருக்கக்கூடாத, ஆனால் ஐந்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனுமிருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு, ஆறு மாதங்களுக்கு குறைவானதொரு காலஅளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.
விளக்கம்: இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக “இயக்கூர்தி” (மோட்டார் வாகனம்) என்பது 1988-ஆம் ஆண்டு இயக்கூர்திகள் சட்டத்தின் 2-ஆம் பிரிவின் (28)- ஆம் கூறிலுள்ள அதே பொருளைக் கொண்டதாக இருக்கும்.
ஜாமீன் குறித்துத் தனியான வகைமுறை ( பிரிவு 6.)
Special Provision regarding Bail
இந்தச் சட்டத்தின்படி, தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயலொன்றைச் செய்துள்ளத்தாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள அல்லது தண்டனைத்தீர்ப்பு, வழங்கப்பட்டுள்ள நபரெவரும், அவர் காவலில் இருப்பாராயின், விடுவிக்கப்படுவதற்கான விண்ணப்பத்தை எதிப்பதற்கான வாய்ப்பொன்று குற்றவழக்குத் தொடரும் அரசு தரப்புக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றாலன்றி (மற்றவர் அளிக்கும்) பிணையத்தின் (ஜாமீன்) பேரிலோ, அல்லது சொந்தப் பிணைமுறிவின் பேரிலோ விடுவிக்கப்படுதல் ஆகாது.
இழப்பீடு செலுத்துவதற்கான ஆணை (பிரிவு 7)
(Order to pay Compensation)
குற்றச் செயல்களை விசாரணை செய்வதற்கான அதிகாரம்: - (பிரிவு 8)
Power to try Offences
பெருநகர் தலைமைக் குற்றவியல் நடுவரொருவரின் நீதிமன்றத்திற்கு அல்லது அமர்வு நீதிமன்றத்திற்குக் கீழமைந்த நீதிமன்றம் எதுவும், இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கத்தக்க குற்றச்செயல் ஏதொன்றையும் விசாரணை செய்தல் ஆகாது.
குறித்த சில நேர்வுகளில் இழப்பீட்டைச் செலுத்துவதற்கான கடப்பாடு(பிரிவு 9.)
(Liability to pay Compensation in Certain Cases)
இந்தச் சட்டத்தின் என்ன அடங்கியிருந்தபோதிலும், அரசியல் கட்சியொன்றினாலோ, வகுப்பு, மொழி அல்லது இனக் குழுவொன்றினாலோ ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம், ஒருங்கு கூடுகை, சட்டம், கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம் எதனின் அல்லது பிற நடவடிக்கை எதனின் பேரிலும் இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்கதான குற்றச்செயலொன்று செய்யப்பட்டிருக்குமிடத்து, அந்தக் குற்றச் செயலானது அத்தகைய அரசியல் கட்சியாலோ, அல்லது வகுப்பு, மொழி அல்லது இனக்குழுவினாலோ செய்யப்பட்டிருப்பதாகவுங்கூட அனுமானிக்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அத்தகைய அரசியல் கட்சியோ அல்லது வகுப்பு மொழி அல்லது இனக்குழுவோ, சொத்து எதற்கும் விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்கான இழப்பீட்டை இந்தச் சட்டத்திற்கும் மற்றும் அதன்படி செய்யப்படும் விதிகளின் வகைமுறைகளுக்கும் இணங்கச் செலுத்துவதற்குக் கடப்பாடுடையதாக இருத்தல் வேண்டும்.
இழப்பீட்டுக் கோரிக்கை (பிரிவு 10.)
Claim For Compensation
பிரிவு 11 இழப்பீட்டை முடிவு செய்வதற்கான அதிகார அமைப்பு:
Authority to Decide Compensation
ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
இழப்பீடானது நிலவரி நிலுவையைப் போன்றே வசூலிக்கப்படுதல் (பிரிவு 12)
Recovery of Compensation as Arrear of Land Revenue
11-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி வகுதுரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பு, சொத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் அல்லது இழப்பு எதற்குமான இழப்பீட்டுத்தொகை நிர்ணயிக்கப்பட்டதன் பேரிலும் 10-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் படி நபரின் விண்ணப்பத்தின் பேரில் அல்லது வகுத்துரைக்கப்பட்டுள்ள அலுவலரின் விண்ணப்பத்தின் பேரிலும் அத்தொகைக்கான சான்றிதழொன்றை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கலாம்; மாவட்ட ஆட்சியரும், நிலவரி நிலுவையொன்றைப் போன்ற அதே முறையில், அதனை வசூலிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
மேல்முறையீடு (பிரிவு 12 A)
Appeal
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம் (பிரிவு 13.)
Power to make Rules
- அரசு இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
- மேற்சொன்ன அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்கு ஊறின்றி, அத்தகைய விதிகள்:
வகுத்துரைக்கப்படவேண்டியதற்கான அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விசயம் எதற்கும் இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும் அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ அல்லது அதனை அடுத்துவருகின்ற கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர், அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும் மாறுதல் எதையும் செய்யச் சட்டமன்றப் பேரவை உடன்படுமானாலோ அல்லது அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ செய்யப்படவோ அல்லது பிறப்பிக்கப்படவோ கூடாது என்று சட்டமன்றப் பேரவை உடன்படுமானாலோ அந்த விதி அல்லது அறிவிக்கையானது அதன் பின்னர் அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே செயல்வடிவம் பெறுதல் வேண்டும்; அல்லது நேர்விற்கேற்ப செயல்வடிவம் போதல் வேண்டும்; எனினும் அவ்வாறு மாற்றியமைத்து அல்லது செயல் வடிவம் பெறாது போனது எதுவும், அந்த விதியின்படியோ அல்லது அறிவிக்கையின்படியோ, முன்னதாகச் செயல்பட்ட செயல் எதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.
பிரிவு. 14 காப்பு
இந்தச் சட்டத்தின் வகைமுறைகள், அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் ஏதொன்றிற்கும் கூடுதலாக அமைந்தவையாக இருக்கவேண்டுமேயன்றி அதைக் குன்றச் செய்வனவாக இருத்தலாகா; மற்றும் இந்தச் சட்டம் ஒருபுறமிருக்க, நபரெவருக்கேனும் எதிராகப் புலனாய்வு என்கிற வகையிலோ, அல்லது மற்றப்படியோ தொடுக்கபடக்கூடிய நடவடிக்கை எதிலிருந்தும் அந்நபருக்கு இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும் விலக்களித்தல் ஆகாது.
பிரிவு 15. நீக்கம்
1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுச்சொத்து (அழிப்பு மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டமானது, இதன் மூலம் நீக்கப்படுகிறது.