சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலை தாம்பரம் இரும்புலியூரில் துவங்கி திருநீர்மலை, அனகாபுத்தூர், கோவூர், போரூர், மதுரவாயல், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம், மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், சூரப்பட்டு, புத்தகரம் வழியாகப் புழலை சென்றடைகிறது. இந்தச் சாலை வழியாக மாநகர் பேருந்துகள், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரியில் இருந்து கோயம்பேடு, ஆவடி, செங்குன்றம், மாதவரம் பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்.
-கே.எஸ்.கணபதி சுப்ரமணியன்,
தாம்பரம்.