சென்னை அஸ்தினாபுரம் பகுதிக்கான மின்கட்டணங்களைச் செலுத்துமிடம் 3 கி.மீ. தள்ளி குரோம்பேட்டையில் உள்ளது. அங்கு செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை. அதனால், தனியாக ஆட்டோவில்தான் செல்ல வேண்டியுள்ளது. பணத்துடன் செல்வதற்கு பெண்களும் முதியோரும் அஞ்சுகின்றனர். மேலும், ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி அஸ்தினாபுரத்தில் உள்ள அரசு வங்கிகளில் இல்லை. அந்த வசதி செயல்பட்ட வங்கியிலும் மின்வாரிய சர்வர் வேலை செய்யாததால், 4 மாதங்களாகச் செலுத்த முடியவில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.சீநிவாசன், அஸ்தினாபுரம்.