அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் வாவின் பேருந்து நிறுத்தம் இடையே ஆம்பிட், கோசர், இந்தியாலேண்ட் மற்றும் பிரின்ஸ் ஐடி பார்க் நிறுவனங்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு பேருந்து நிறுத்தம் இல்லை. இதனால்
இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து வரவேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு கால விரயம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க போக்கு
வரத்துக் கழக அதிகாரிகள் முன்வரவேண்டும்.
ஆர். வெங்கடாசலம், அம்பத்தூர்-53.