திருமங்கலம் வி5 காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் பயன் இல்லை. நடைபாதைகள் ஆக்கிரமிப்பால் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். மேலும் கடைகள் வைக்க தடை செய்யப்பட்ட இடம் என்றும் அறிவிப்புப் பலகை வைக்கப்படவேண்டும்.
- லட்சுமிபாய், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம்