சென்னை சைதாப்பேட்டை சின்னமலை கோர்ட் அருகே பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் பயணியர் நிழற்குடை அருகே நிற்காமல் முன்பாகவே நின்றுவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பேருந்தில் ஓடிவந்து ஏறும் நிலை உள்ளது. பயணியர் நிழற்குடை அருகே பேருந்துகளை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர், சென்னை - 41.